தினமும் காலையில்
சுவரின் ஓட்டை வழியாக
வந்து கொண்டு இருந்த
சூரிய ஓளியை காணவில்லை.....
.
பத்தாவது படிக்கும் போது
பத்தாவது படிக்கும் போது
டூரில் வாங்கிய சீப்பு
நான்கு வருடத்திற்கு
பிறகு காணவில்லை.....
.
ரொம்ப நாளாக
காரணமே இல்லாமல்
வைத்திருந்த ஆனந்த விகடனும்
கூட காணவில்லை.....
.
ஏழாம் வகுப்பில்
ஒருமுறை ஆங்கிலத்தில்
நிறைய மதிப்பெண் எடுத்த
பேப்பரை காணவில்லை.....
.
எழுதி கொடுக்காமலே
மறைத்து வைத்திருந்த
ஒரு காதல் கடிதமும்
காணவில்லை.....
.
இன்னும் நிறைய
காணவில்லை,
பழைய வீட்டிலிருந்து
புது வீட்டிற்கு வந்ததால்....
இவற்றையெல்லாம் விட
.
உன்னை உன்
பதினாறு வயதிலிருந்து
எனக்கு அழகாய் காட்டிய
அந்த ஜன்னலையும்
காணவில்லை.....